மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் பத்சத் என்ற பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இதில் கவுரவ் துபே என்ற 4 வயது சிறுவன் நேற்று தவறி விழுந்துள்ளான்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியின் ஈடுபட்டு வந்தன. சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்த மீட்பு படையினர், 16 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 4 மணியளவில் சிறுவனை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
அதனைதொடர்ந்து கத்னி மாவட்டத்தில் பார்ஹி சுகாதார மையத்திற்கு சிறுவனை கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வியாழக்கிழமை காலை 55 அடி ஆழத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் நான்கு வயது குழந்தை தவறி விழுந்ததுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.